search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி
    X
    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி

    சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் காரில் போலீஸ் சோதனை

    சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி காரை விமான நிலைய போலீசார் சோதனை செய்தனர்.

    ஆலந்தூர்:

    பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையம் வரும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன. புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை 10.15 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அவரை அழைத்துச் செல்ல வந்த காரையும் விமான நிலைய போலீசார் சோதனை செய்தனர்.

    Next Story
    ×