search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பெருங்களத்தூரில் ரூ.20 லட்சம் குட்கா பறிமுதல் - 3 பேர் கைது

    பெருங்களத்தூரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    பெருங்களத்தூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பீர்க்கங்கரணை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 சரக்கு ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1,338 கிலோ எடையுள்ள குட்கா இருந்தது.

    இதையடுத்து ஆட்டோவில் இருந்த பிரகாஷ், நூர்முகமது, பவுன்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் பீர்க்கங்கரணை சேர்ந்த முனிசாமி என்பவர் குட்காவை குடோனில் பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×