என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பத்தூர் அருகே தொழிலாளி வீட்டில் 40 பவுன் நகை ரூ.5 லட்சம் திருட்டு
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (72) இவர் திருப்பத்தூரில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி அம்சவேணி (52). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு முதுகு தண்டில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் அருகே உள்ள சுப்பிரமணியசாமி கோவில் தெரு பகுதியில் உள்ள தனது மகன் பிரகாஷ் என்பவரது வீட்டில் தங்கி தனது மனைவிக்கு சிகிச்சை செய்து வருகின்றனர்.
நேற்று இரவும் குடும்பத்துடன் அனைவரும் பிரகாஷ் வீட்டிலேயே தங்கினர்.
இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் தங்கவேல் தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை 5 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் டிவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தங்கவேலு திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த தாலுகா இன்ஸ்பெக்டர் மதனலோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
நள்ளிரவில் கிராமப்பகுதியில் இந்த திருட்டு சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்