என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்ணாடம் அருகே திருடு போன அம்மன் நகையை கோவிலில் வீசிசென்ற கொள்ளையர்
Byமாலை மலர்16 Aug 2019 11:23 AM GMT (Updated: 16 Aug 2019 11:23 AM GMT)
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே திருடு அம்மன் நகையை கோவிலில் வீசிசென்ற கொள்ளையர் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே கோனூர் கிராமத்தில் செல்லியம்மன், மாரியம்மன், அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது ஆடித்திருவிழா நடந்து வருகிறது.
கடந்த 14-ந் தேதி வீதி உலா முடிந்து சாமி சிலைகள் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. மறுநாள் காலை கோவில் பூசாரி செம்புலிங்கம் சாமிகளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த மாலைகளை அகற்றினார்.
அப்போது அம்மன் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகை கொள்ளைபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல் ஊருக்குள் காட்டு தீ போல பரவியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து முதல் கட்டமாக கோவில் பூசாரி செம்புலிங்கம், மைக்செட் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் சாமி நகை கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து போலீசார் சாமி நகையை தேடி வந்தனர்.
இன்று காலை பூசாரி செம்புலிங்கம் கோவில் வளாகத்தில் சுற்றி வந்தார். அப்போது அங்கு உள்ள குப்பை மேட்டில் பொருள் ஒன்று ஜொலித்தது. உடனே பூசாரி செம்புலிங்கம் அங்கு சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் திருட்டு போன 6 பவுன் நகை கிடப்பதை பார்த்தார். இதனை எடுத்து கொண்டு ஊர்முக்கிய பிரமுகர்களிடம் தெரிவித்தார்.
இந்த நகையை கொள்ளையர்கள் வீசி சென்று இருப்பது தெரிய வந்தது. பின்னர் மீட்கப்பட்ட நகைக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே கோனூர் கிராமத்தில் செல்லியம்மன், மாரியம்மன், அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது ஆடித்திருவிழா நடந்து வருகிறது.
கடந்த 14-ந் தேதி வீதி உலா முடிந்து சாமி சிலைகள் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. மறுநாள் காலை கோவில் பூசாரி செம்புலிங்கம் சாமிகளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த மாலைகளை அகற்றினார்.
அப்போது அம்மன் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகை கொள்ளைபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல் ஊருக்குள் காட்டு தீ போல பரவியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து முதல் கட்டமாக கோவில் பூசாரி செம்புலிங்கம், மைக்செட் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் சாமி நகை கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து போலீசார் சாமி நகையை தேடி வந்தனர்.
இன்று காலை பூசாரி செம்புலிங்கம் கோவில் வளாகத்தில் சுற்றி வந்தார். அப்போது அங்கு உள்ள குப்பை மேட்டில் பொருள் ஒன்று ஜொலித்தது. உடனே பூசாரி செம்புலிங்கம் அங்கு சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் திருட்டு போன 6 பவுன் நகை கிடப்பதை பார்த்தார். இதனை எடுத்து கொண்டு ஊர்முக்கிய பிரமுகர்களிடம் தெரிவித்தார்.
இந்த நகையை கொள்ளையர்கள் வீசி சென்று இருப்பது தெரிய வந்தது. பின்னர் மீட்கப்பட்ட நகைக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X