search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    நேதாஜி மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

    ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு தருமபுரி,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் தக்காளி அதிகளவில் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.

    தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் செடியில் உள்ள தக்காளி வெடிக்க தொடங்கியுள்ளது. இதனால் அதிகளவிலான தக்காளி அறுவடை செய்யப்பட்டு மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.

    ஈரோடு நேதாஜி மார்க்கெட்டிற்கு நாள்தோறும் 4 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். ஆனால் கடந்த இரு தினங்களாக சுமார் 10 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

    இதனால் நேற்று 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி இன்று 100 ரூபாய்க்கு விற்பனையானது. விலை குறைவாக இருந்த போதிலும் விற்பனை மந்தமாக இருந்ததால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.

    இரண்டு நாட்களுக்கு மேல் தக்காளி விற்பனை ஆகாமல் இருப்பதால் தக்காளி அழுக தொடங்கி விட்டது. இதன் காரணமாக வியாபாரிகள் சிலர் தக்காளிகளை குப்பையில் கொட்டி சென்றனர். இரண்டு நாட்களுக்கு மேல் இருப்பு வைக்க முடியாது என்பதால் குப்பையில் கொட்டியதாக வியாபாரிகள் சோகத்துடன் தெரிவித்தனர். இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.9.50 -க்கு விற்பனை ஆனது.
    Next Story
    ×