search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    ஆற்றில் அமுக்கி வாலிபரை கொன்ற அக்காள் கணவர் கைது

    நாகப்பட்டினம் அருகே வாலிபர் தலையை பிடித்து ஆற்றுக்குள் அமுக்கி அக்காள் கணவர் கொலை செய்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூர் வெட்டாற்றில் ஒரு வாலிபர் பிணம் கிடப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வாலிபர் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் இறந்து கிடந்த வாலிபர் திட்டச்சேரி அருகே உள்ள கீழ கொத்தமங்கலம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிட்டப்பா மகன் கார்த்தி (வயது 33) என தெரிய வந்தது.

    மேலும் பிரேத பரிசோதனையில் இறந்த வாலிபர் தலையை பிடித்து ஆற்றுக்குள் அமுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து வாலிபர் கார்த்தியை கொன்ற நபர் யார்? என்று தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் கார்த்தியை அவரது அக்காள் கணவரே கொலை செய்தது தெரிய வந்தது.

    கார்த்தி அக்காள் ஜெயந்தியின் கணவர் மணி என்ற மகேந்திரன் (வயது 34). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மகேந்திரனுக்கும் அவரது மனைவி ஜெயந்திக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. அப்போது ஜெயந்தி கணவரிடம் சண்டை போட்டுக்கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மகேந்திரன், கார்த்தியை அழைத்துக்கொண்டு மது குடிப்பதற்காக காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினத்துக்கு வந்தார். மது பாட்டிலை வாங்கி கொண்டு இருவரும் சேர்ந்து நாகூர் வெட்டாற்று அருகில் அமர்ந்து குடித்து கொண்டு இருந்தனர். அப்போது ஜெயந்தியை தன் வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கார்த்தியிடம் மகேந்திரன் கூறினார். இதில் இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மகேந்திரன் கார்த்தியை கழுத்தை நெரித்து ஆற்றில் அமுக்கி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டார்.

    இதையடுத்து நாகூர் போலீசார் மகேந்திரனை கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×