என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்- விவசாயிகள் வேண்டுகோள்
கோபி:
தடப்பள்ளி அரக்கன் கோட்டை -பவானி நதி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் விடுத்து உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கொடிவேரி பாசனத்திற்கு உட்பட்ட தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பழைய ஆய்க்கட்டு பாசனங்களுக்கு வருடந்தோறும் ஏப்ரல் 15 முதல் பிப்ரவரி 15 வரை பத்து மாதங்களுக்கு இரு போகம் நஞ்சை பாசனத்திற்கு நீர் திறந்து விடுவது வழக்கம்.
2019 ஏப்ரல் 15 அன்று அணையின் நீர்மட்டம் குறைவாக இருந்த காரணத்தால் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நீர் திறக்கப்படவில்லை. ஜூலை முதல் வாரத்தில் முதல் போக பாசனத்திற்கு நீர் திறக்க கோரிக்கை விடுத்தோம். ஈரோடு மாவட்ட கலெக்டர் அவர்களுக்கும் பொதுப்பணித்துறையும் கலந்து ஆலோசித்து வருகிற வாரங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பவானிசாகர் அணைக்கு வரத்து அதிகரிக்கின்ற பொழுதும் அணையின் நீர்மட்டம் 10 டீ.எம்.சி.க்கு மேலாக நீர் உயர்கின்ற பொழுது உங்களுடைய கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு நீர் திறக்க ஆவனம் செய்யப்படும் என உறுதியளித்தீர்கள்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாகவே பருவமழை தீவிரமடைந்த அணைக்கு நீர் வரத்து கூடியுள்ளது. எனவே உடனடியாக தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு வரும் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்