search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவிழ்ந்து கிடக்கும் டேங்கர் லாரி.
    X
    கவிழ்ந்து கிடக்கும் டேங்கர் லாரி.

    நாகை அருகே டேங்கர் லாரி வாய்க்காலில் கவிழ்ந்தது- டிரைவர் உயிர் தப்பினார்

    நாகை அருகே கச்சா எண்ணையை ஏற்றிக் கொண்டு வந்த டேங்கர் லாரி வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மாவட்டம் களப்பாலில் இருந்து நேற்று டேங்கர் லாரியில் 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கச்சா எண்ணையை ஏற்றிக் கொண்டு நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு திருத்துறைப் பூண்டி நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது கருவேலங்கடை என்ற இடத்தில் வந்த போது நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த வாய்க்காலில் விழுந்து கவிழ்ந்தது.

    இதனால் லாரியில் இருந்த கச்சா எண்ணை முழுவதும் வெளியேறி வயல் வெளிகளில் கொட்டியது. இதனால் அந்த பகுதியில் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிரேன் மூலம் மீட்டு வேறு ஒரு டேங்கர் லாரியில் ஏற்றினர்.

    இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இந்த விபத்து பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×