என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆசனூர் அருகே ரோட்டை மறைத்து நின்ற காட்டு யானைகள்
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர் மாளம் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன.
ஆசனூர், தாளவாடி, கேர்மாளம், ஜீர்கள்ளி, வனப் பகுதியில் போதிய மழை இல்லாததால் யானைகள் உணவு தேடி வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் சுற்றி திரிகின்றன. அப்போது சில சமயங்களில் யானைகள் ரோட்டுக்கு வந்து ரோட்டை மறித்து நிற்கிறது.
இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி யானைகள் சென்ற பிறகு செல்கிறார்கள். இதன் காரணமாக போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த அடர்ந்த வனப் பகுதியில் திண்டுகல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த ரோடு வழியாக எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். ஆசனூர் வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஆசனூர் அருகே குட்டியுடன் நேற்று காட்டு யானைகள் திடீரென சாலையை வழி மறைத்து அங்கு உள்ள மரக்கிளைகளை உடைத்து தின்று கொண்டு இருந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் நிறுத்தப்பட் டன.
அந்த யானைகள் நீண்ட நேரம் ரோட்டில் உலா வந்தது. ரோட்டை மறித்து நின்ற யானைகள் தானகவே வனப்பகுதிகுள் சென்றது இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்