search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    பெருந்துறை அருகே ரோட்டை கடந்த விவசாயி கார் மோதி பலி

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ரோட்டை கடக்க முயன்ற விவசாயி கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில், பள்ளபாளையம், ஆவரங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 65). விவசாயியான இவர் சொந்த வேலையாக பெருந்துறைக்கு வந்தார்.

    மதியம் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் காஞ்சிக்கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். இவர் காஞ்சிக்கோவில் ரோடு பைபாசை கடக்க முயன்றார். அப்போது கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சோம சுந்தரம் சுமார் 50 அடி தூரத்தில் கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விபத்தில் பலியான சோமசுந்தரத்தின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    விபத்து குறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் பலியான சோமசுந்தரத்துக்கு சாமியாத்தாள் என்ற மனைவி, மாலதி, கவுதமி என்ற 2 மகள்கள் உள்ளனர்.
    Next Story
    ×