என் மலர்
செய்திகள்

விபத்து
மோட்டார் சைக்கிள் மோதியதில் த.மா.கா. பிரமுகர் பலி
கீரனூர் அருகே நடந்து சென்ற தமாகா பிரமுகர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கீரனூர்:
கீரனூர் அருகே ஒடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது54). தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவர் நேற்று இரவு ஒடுக்கூர் செல்வதற்காக புறவழிச் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
கீழே விழுந்த செல்வராஜ்க்கு தலை மற்றும் உடலில் பலத்தகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கீரனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோதி விட்டு நிற்காமல் சென்ற நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






