search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்குதல்
    X
    மின்சாரம் தாக்குதல்

    மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி பலி

    மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி செம்பனார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த செம்பனார்கோவில் அடுத்த மேமாத்தூரை சேர்ந்தவர் சீதளாதேவி(வயது 17). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் குளியலறைக்கு சீதளாதேவி சென்றார். அப்போது அங்கிருந்த சுவீட்சை போட்ட போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி செம்பனார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×