என் மலர்
செய்திகள்

மலையம்பாளையம் அருகே கல்லூரி மாணவர் தற்கொலை
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையம் பாசூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் ஹரிகிருஷ்ணன்(வயது 20). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. இரண்டம் ஆண்டு படித்து வந்தார்.
ஆனால், படிப்பு சரிவர வராததால், அதே கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு சேர்ந்து படித்து வந்தார். இந்நிலையில், கல்லூரி படிப்பு வராத மனவேதனையில் இருந்த ஹரிகிருஷ்ணன் கடந்த 25-ந் தேதி வீட்டில் இருந்தாராம். எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு ஹரி கிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.






