என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாடகை வீட்டில் வட மாநில பெண்களிடம் உல்லாசம்- 2 வாலிபர்கள் கைது
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் கண்ணகி வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு அடிக்கடி சந்தேகப்படும் படியாக வெளி நபர்கள் வந்து செல்வதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு புகார் வந்தது.
அதன்பேரில் கருங்கல் பாளையம் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது 2 வாலிபர்கள் 2 பெண்களுடன் உல்லாசமாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த 2 வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அஜ்மல்கான் மதுரையைச் சேர்ந்த பாபு கான் என தெரியவந்தது.
இவர்கள் இருவரும் கர்நாடகாவை சேர்ந்த 19 வயது பெண் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.
பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி விபசாரத்தில் தள்ளினார்களா? என்று குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் மீட்கப்பட்ட 2 பெண்களையும் கோவையில் உள்ள காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
மேலும் ஈரோடு பகுதியில் இதே போல் இன்னும் பலர் வாடகை வீடு பிடித்து வீட்டின் உரிமையாளர்களுக்கு தெரியாமல் பெண்களை வைத்து விபசாரம் நடத்தி சம்பாதித்து வருவதாக பல புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்