என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கடன் தொல்லை- பெண் தூக்குபோட்டு தற்கொலை
ஈரோடு:
ஈரோடு சின்ன சடையம்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(45). ஸ்பின்னிங் மில் லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார். இவரது மனைவி சங்கீதா(40). இவர்களுக்கு கண்ணன்(21) என்ற மகன் உள்ளார்.
செந்தில்குமார் அவருக்கு தெரிந்தவர்களிடம் கடன் அதிகம் வாங்கியிருந்ததாலும், தொழில் நஷ்டம் அடைந்ததாலும், கடனை திரும்ப செலுத்த முடியாமல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு சென்று விட்டார்.
இதனால், கடன் தொல்லையால் சங்கீதா சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், மன வேதனையில் இருந்த சங்கீதா சம்பவத்தன்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், அந்தியூர் பருவாச்சி பிச்சனூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(50). தொழிலாளி. இவர் கடந்த 2 வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் கடந்த 15ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்