என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மங்கள் ஏரி தூர்வாரப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு
Byமாலை மலர்19 July 2019 7:26 AM GMT (Updated: 19 July 2019 7:26 AM GMT)
தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் பழமையான மங்கள் ஏரியை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் கண்ணதாசன் தெரு பகுதியில் பழமையான மங்கள் ஏரி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை சுற்றி குறிஞ்சி நகர், கண்ணதாசன் தெரு, காமராஜர் நெடுஞ்சாலை உட்பட 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இந்த குளத்தில் உள்ள நீரை பிடித்து இப்பகுதி மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த குளம் தூர் வாரப்படாமல் உள்ளது.
மேலும் பெருங்களத்தூர் பேரூராட்சி இப்பகுதியில் சுற்றியுள்ள குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரை குளத்தில் கலக்கச் செய்வதால் தற்போது குளத்தினை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பயனற்றுக் கிடக்கிறது.
மேலும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததாலும் கழிவுநீர் தேங்கி கிடப்பதாலும் குளம் முழுவதும் செடி, கொடிகள் மூடி காணப்படுகிறது.
கழிவுநீரால் கடும் துர்நாற்றமும் வீசுவதால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் குளத்தின் அருகே உள்ள சிவன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பலன் இல்லை. இந்த குளத்தை தூர்வார ரூ. 20 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டும் சரிவர பதில் அளிக்கவில்லை.
எனவே நிதி ஒதுக்கப்பட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ள குளம் சீரமைப்பு பணியை உடனே தொடங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் கண்ணதாசன் தெரு பகுதியில் பழமையான மங்கள் ஏரி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை சுற்றி குறிஞ்சி நகர், கண்ணதாசன் தெரு, காமராஜர் நெடுஞ்சாலை உட்பட 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இந்த குளத்தில் உள்ள நீரை பிடித்து இப்பகுதி மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த குளம் தூர் வாரப்படாமல் உள்ளது.
மேலும் பெருங்களத்தூர் பேரூராட்சி இப்பகுதியில் சுற்றியுள்ள குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரை குளத்தில் கலக்கச் செய்வதால் தற்போது குளத்தினை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பயனற்றுக் கிடக்கிறது.
மேலும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததாலும் கழிவுநீர் தேங்கி கிடப்பதாலும் குளம் முழுவதும் செடி, கொடிகள் மூடி காணப்படுகிறது.
கழிவுநீரால் கடும் துர்நாற்றமும் வீசுவதால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் குளத்தின் அருகே உள்ள சிவன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பலன் இல்லை. இந்த குளத்தை தூர்வார ரூ. 20 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டும் சரிவர பதில் அளிக்கவில்லை.
எனவே நிதி ஒதுக்கப்பட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ள குளம் சீரமைப்பு பணியை உடனே தொடங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X