என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் இடி,மின்னலுடன் பலத்த மழை
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இரவு 9 மணியளவில் திடீரென்று இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்ததது. சுமார் 1 மணி நேரம் மழை கொட்டியதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. கடலூர் பஸ்நிலையம் பகுதி, திருப்பாதிரிப்புலியூர் பத்திரபதிவு அலுவலக சாலை, தலைமை தபால் அலுவலகம் பகுதி, பாரதி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. கடலூரில் இடி, மின்னலுடன் மழை பெய்ததால் மின் தடை ஏற்பட்டது. இதனால் கடலூர் நகரம் இருளில் முழ்கியது.
இரவு 11 மணிக்கு பிறகு மழை தூறிக்கொண்டிருந்தது.
பெண்ணாடம், திட்டக்குடி, சவுந்தரசோழபுரம், செம்பேரி, குடிகாடு, கூடலூர் போன்ற பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மழைபெய்தது.
அதுபோல் கடலூர் மாட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணிமுதல் பல்வேறு இடங்களில் பலத்த மழைபெய்தது. விழுப்புரம், பிடாகம், பேரங்கியூர், கோலியனூர், பெரும்பாக்கம், சாலை, வளவனூர், திருநாவலூர் போன்ற இடங்களில் பலத்த மழை பெய்ததது. அதுபோல் மரக்காணம் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைபெய்ததது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்