என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகை அருகே வெவ்வேறு இடங்களில் தூக்குபோட்டு வியாபாரி, வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்18 July 2019 12:10 PM GMT (Updated: 18 July 2019 12:10 PM GMT)
நாகை அருகே வெவ்வேறு இடங்களில் வியாபாரி மற்றும் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை அருகே கீழ்வேளூரை அடுத்த பழையனூர் மேல்பாதி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மகன் பிரேம்நாத் (வயது 18) கூலி தொழிலாளி.
இவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் பெற்றோர் பிரேம்நாத்தை கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த அவர் வீட்டிற்கு அருகிலுள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்வேளூரை அடுத்த சிக்கல் வடக்கு தெருவை சேர்ந்தவர் குமார் (55), பால் வியாபாரி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற போலீசார், உடலை நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை அருகே கீழ்வேளூரை அடுத்த பழையனூர் மேல்பாதி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மகன் பிரேம்நாத் (வயது 18) கூலி தொழிலாளி.
இவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் பெற்றோர் பிரேம்நாத்தை கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த அவர் வீட்டிற்கு அருகிலுள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்வேளூரை அடுத்த சிக்கல் வடக்கு தெருவை சேர்ந்தவர் குமார் (55), பால் வியாபாரி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற போலீசார், உடலை நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X