search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை (கோப்பு படம்)
    X
    தற்கொலை (கோப்பு படம்)

    நாகை அருகே வெவ்வேறு இடங்களில் தூக்குபோட்டு வியாபாரி, வாலிபர் தற்கொலை

    நாகை அருகே வெவ்வேறு இடங்களில் வியாபாரி மற்றும் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை அருகே கீழ்வேளூரை அடுத்த பழையனூர் மேல்பாதி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மகன் பிரேம்நாத் (வயது 18) கூலி தொழிலாளி.

    இவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் பெற்றோர் பிரேம்நாத்தை கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த அவர் வீட்டிற்கு அருகிலுள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழ்வேளூரை அடுத்த சிக்கல் வடக்கு தெருவை சேர்ந்தவர் குமார் (55), பால் வியாபாரி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற போலீசார், உடலை நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×