search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை 8 வழிச்சாலை- முதல்வர் விளக்கம்

    சென்னை அருகே பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை உள்ள சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    சென்னை அருகே பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை உள்ள 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

    பெருங்களத்தூர்


    மேலும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பெருங்களத்துரில் பல்லடுக்கு பாலம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பாலம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவைப்படும் இடங்களில் பல்லடுக்கு மேம்பாலம் கட்டப்படும். தற்போது சென்னையில் 9 மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெறுகிறது. விரைவில் பணிகள் முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×