search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    ஆணவ படுகொலையை தடுக்க அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் - திருமாவளவன்

    ஆணவ படுகொலையை தடுக்க அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி மெயின் ரோட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊராட்சி தோறும் பள்ளிகளை திறந்து ஏழை மக்களுக்கு காமராஜர் கல்வி கொடுத்தார். தற்பொழுது காவி மயத்திலிருந்து கல்வியை காக்க வேண்டும் என உறுதிமொழி எடுக்க வேண்டும். இந்தியா முழுவதும் மதவாத அரசியலை தூண்டும் விதமாக பாரதிய ஜனதா ஆட்சி செயல்படுகிறது. கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து விலக்கி மாநில அரசு அதிகாரத்தில் உள்ள பட்டியலில் வைக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள் ஆணவ படுகொலையைத் தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும். நீட் தேர்வை முழுமையாக விலக்க வேண்டும். இதுகுறித்து 2 மசோதாக்கள் நிறைவேற்றியும் அது குறித்து மத்திய அரசு எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது தமிழக அரசு நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சட்டம் கொண்டு வர வேண்டும்.

    தமிழக குடிநீர் பிரச்சினையை போக்க மத்திய அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும். இதற்கு மாநில அரசு உரிய அழுத்தம் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×