என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கேளம்பாக்கத்தில் வாலிபர் கொலையில் நண்பர்கள் 2 பேர் கைது

    கேளம்பாக்கத்தில் வாலிபர் கொலையில் நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்போரூர்:

    கேளம்பாக்கத்தை சேர்ந்தவர் அருள் (வயது 38). கூலித் தொழிலாளி. நேற்று காலை அவர் கேளம்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அருளை அடித்து கொன்றது அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான ஹரிஷ்குமார், ரேவந்த் என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் அருளை அடித்து கொன்றதாக தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×