என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நாகை அருகே காவலாளியை தாக்கிய 2 பேர் கைது
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த வேளாங்கண்ணி சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவர் வடக்கு பால்பண்ணைசேரியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தொழில் பயிற்சி நிலையத்தின் முன்பு அமர்ந்து 2 பேர் மது குடித்து உள்ளனர். இதை பார்த்து ராஜேந்திரன் கண்டித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் ராஜேந்திரனை கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் நாகை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். இதுபற்றி ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அவரை தாக்கிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த மணிபாரதி (21), பிரவீன் (20) என்று தெரியவந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்