என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை- நாகை கோர்ட்டு தீர்ப்பு
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் வடிவேலு (வயது55) ராஜகோபால் 56). இவர்கள் இருவரும் விவசாயக் கூலித் தொழிலாளிகள்.
உறவினர்களான இவர்கள் ரெண்டு பேரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இது தொடர்பாக நாகை மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி ராஜகோபால், வடிவேல் வீட்டுக்கு சென்று அவரை தகாத வார்த்தையால் பேசி தாக்கி கொண்டனர்.
இதில் படுகாயமடைந்த வடிவேல் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து புகார் புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் கொலை முயற்சி வழக்குபதிவு செய்து ராஜகோபாலை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை நாகை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். வடிவேலை கொலை செய்ய முயன்ற ராஜகோபாலுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 5,500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்