search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜகோபால்
    X
    ராஜகோபால்

    கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை- நாகை கோர்ட்டு தீர்ப்பு

    வேதாரண்யம் அருகே கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் வடிவேலு (வயது55) ராஜகோபால் 56). இவர்கள் இருவரும் விவசாயக் கூலித் தொழிலாளிகள்.

    உறவினர்களான இவர்கள் ரெண்டு பேரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    இது தொடர்பாக நாகை மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி ராஜகோபால், வடிவேல் வீட்டுக்கு சென்று அவரை தகாத வார்த்தையால் பேசி தாக்கி கொண்டனர். 

    இதில் படுகாயமடைந்த வடிவேல் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து புகார் புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் கொலை முயற்சி வழக்குபதிவு செய்து ராஜகோபாலை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை நாகை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். வடிவேலை கொலை செய்ய முயன்ற ராஜகோபாலுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 5,500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×