search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வேளாங்கண்ணியில் எலி மருந்தை தின்று பெண் தற்கொலை

    வேளாங்கண்ணியில் குடும்ப தகராறு காரணமாக எலி மருந்தை தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் வாசிச நகர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன். இவரது மனைவி இந்திரா (வயது 40). இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த இந்திரா கடந்த 7-ந் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு வந்து உள்ளார். அப்போது இந்திரா, எலி மருந்தை வி‌ஷம் தின்று விட்டு தனது ஊருக்கு திரும்பி சென்று உள்ளனர். அங்கு வீட்டுக்கு சென்றதும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×