என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஈரோட்டில் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை

    ஈரோட்டில் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையம் எல்ஐசி நகரை சேர்ந்த சுப்பிரமணி மகன் கோகுலகிருஷ்ணன்(21). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. மெக்கானிக் இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கோகுலகிருஷ்ணன் குடும்பத்தினர் நேற்று கோயிலுக்கு சென்றிருந்தனர்.

    அப்போது வீட்டில் தனியாக இருந்த கோகுலகிருஷ்ணன் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வீட்டிற்கு திரும்ப வந்த கோகுலகிருஷ்ணன் பெற்றோர் பார்த்த போது மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கோகுலகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, கோகுலகிருஷ்ணனின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×