என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து ராணுவ வீரர் பலி
ஆற்காடு:
திமிரி அடுத்த பல்லகுடிசை கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 39). ராணுவ வீரர், அவரது மனைவி விஜி (29). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும் 8 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
மனோகரன் பஞ்சாபில் உள்ள பட்டேலா என்ற பகுதியில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். விடுமுறையில் மனோகரன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேர்க்கடலை பயிரிட கள வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த மின்கம்பத்தில் கையை வைத்தார்.
திடீரென மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததால் மனோகரன் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டார்.
இதனை கண்ட அவரது மனைவி கதறி அழுதார். அருகில் இருந்தவர்கள் மனோகரனை மீட்டு ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திமிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்