என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வாலாஜா அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
வாலாஜா:
வாலாஜா அருகேயுள்ள மருதம்பாக்கம் அடுத்த கிருஷ்ணாபுரத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் வழங்கபடவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை ராணிப்பேட்டை-பொன்னை சாலையில் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில் எங்கள் ஊரில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. பொன்னை ஆற்றில் இருந்து பைப் மூலம் டேங்கிற்கு தண்ணீர் கொண்டு வரபட்டு சப்ளை செய்துவந்தனர்.
தற்போது குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் மோட்டாரை இயக்கபட முடியவில்லை. இது குறித்து மேல்பாடி மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்த போது புதியதாக டிரான்ஸ்பார்மர் அமைத்து சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தனர்.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடந்த 20 நாட்களாக குடிநீர் இன்றி தவித்து வருகிறோம் என்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, தாசில்தார் பூமா, வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் ராணிப்பேட்டை பொன்னை சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்