search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலாஜா அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
    X

    வாலாஜா அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    வாலாஜா அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வாலாஜா:

    வாலாஜா அருகேயுள்ள மருதம்பாக்கம் அடுத்த கிருஷ்ணாபுரத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் வழங்கபடவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை ராணிப்பேட்டை-பொன்னை சாலையில் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில் எங்கள் ஊரில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. பொன்னை ஆற்றில் இருந்து பைப் மூலம் டேங்கிற்கு தண்ணீர் கொண்டு வரபட்டு சப்ளை செய்துவந்தனர்.

    தற்போது குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் மோட்டாரை இயக்கபட முடியவில்லை. இது குறித்து மேல்பாடி மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்த போது புதியதாக டிரான்ஸ்பார்மர் அமைத்து சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தனர்.

    ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடந்த 20 நாட்களாக குடிநீர் இன்றி தவித்து வருகிறோம் என்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, தாசில்தார் பூமா, வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் ராணிப்பேட்டை பொன்னை சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×