என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
வேலூர்:
வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் எம்.பி.ஏ. பட்டதாரி பெண் தனது காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார். அவர் எஸ்.பி.யிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது பெயர் சரண்யா (வயது 23). எம்.பி.ஏ.பட்டதாரி. நான் திருப்பத்தூரில் பெற்றோருடன் வசித்து வந்தேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த கவுதம் (25). என்பவரை காதலித்தேன். எனது காதல் வீட்டிற்கு தெரியவந்தது. எனது பெற்றோர்கள் காதலை ஏற்கவில்லை.
இதனால் கடந்த வருடம் வீட்டிற்கு தெரியாமல் இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டேன். பின்னர் திருமணத்தை பதிவு செய்து கொண்டு எனது பெற்றோர் வீட்டில் வசித்தேன்.
இந்நிலையில் எனது பெற்றோர் எனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். எனவே நான் வீட்டைவிட்டு வெளியேறி எனது காதல் கணவர் கவுதம் வீட்டிற்கு சென்று விட்டேன்.
தற்போது எனது பெற்றோர்கள் மூலம் எனக்கும், எனது காதல் கணவர் மற்றும், அவரது குடும்பத்திற்கும் ஆபத்து உள்ளது. எனவே எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்