search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோலார்பேட்டை அருகே மினிவேனில் சாராயம் கடத்திய 3 பேர் கைது
    X

    ஜோலார்பேட்டை அருகே மினிவேனில் சாராயம் கடத்திய 3 பேர் கைது

    ஜோலார்பேட்டை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மினிவேனில் சாராயம் கடத்திய 3 பேரை கைது செய்தனர்.

    ஜோலார்பேட்டை:

    காஞ்சிபுரத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு சாராயம் கடத்தி வருவதாக திருப்பத்தூர் கலால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் போலீசார் தாமலேரி முத்தூர் பகுதியில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 40 கேன்களில் 1500 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.

    வேனில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் வாணியம்பாடியை சேர்ந்த அப்துல் அசூர் (வயது 34), ஜோலார்பேட்டை பெரிய மூக்கனூரை சேர்ந்த ரமேஷ்(43), மகி(41) என்பது தெரிய வந்தது. இதையடுத்து சாராயத்துடன் வேனை பறிமுதல் செய்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×