என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆப்பக்கூடலில் மனைவி பிரிந்த வேதனையில் டெய்லர் தற்கொலை
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 34) டெய்லர். இவரது மனைவி பிரியா (33). இவர்களுக்கு யுகாஸ், சியாஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. பிரியா கணவருடன் கோபித்துக்கொண்டு பட்டுக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு தனது 2 மகன்களுடன் சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று பட்டுக்கோட்டைக்கு சென்ற சக்திவேல் மனைவியுடன் சமாதானம் பேசி வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் மனைவி வரவில்லை. இதனால் மன வேதனையில் அவர் இருந்தார். இன்று காலை டெய்லர் கடைக்கு வந்த சக்திவேல் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்