search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலாஜா அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
    X

    வாலாஜா அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    வாலாஜா அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள ஒழுகூர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த மாதங்களாக குடிநீர் வழங்கபடவில்லை.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர். வாலாஜா- தலங்கை செல்லும் சாலையில் இன்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்ததை நடத்தினர். அப்போது எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் ஆவேசமாக கூறினர். சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×