என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகையில் தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பல்
Byமாலை மலர்13 Jun 2019 2:47 PM GMT (Updated: 13 Jun 2019 2:47 PM GMT)
நாகையில் இன்று அதிகாலை தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில் லட்சக்கணக்கான பொருட்கள் சேதம் அடைந்தன.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் வ.உ.சி தெருவில் உள்ள ராவணன் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை 2 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரது வீட்டில் இருந்து பயங்கர சத்ததுடன் தீப்பிழம்பு ஏற்பட்டதை அடுத்து வீட்டின் சுவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடிந்து விழுந்தன.
மேலும் அருகில் உள்ள பரமு மற்றும் லட்சுமிஅம்மாள் ஆகியோரது வீட்டிற்கும் தீ மளமளவென பரவியது. இந்த தீ விபத்தில் 3 வீடுகளிலும் உள்ள அனைத்து பொருட்களும் , ஒரு இருசக்கர வாகனமும் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.
தகவலறிந்து 2 வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர், தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X