search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே குடும்ப தகராறில் கோஷ்டி மோதல்
    X

    திண்டுக்கல் அருகே குடும்ப தகராறில் கோஷ்டி மோதல்

    திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சினையில் இருதரப்பினர் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை வேல்வார்கோட்டை பழையகலராம்பட்டியை சேர்ந்தவர் சோலைராஜா. இவரது மனைவி சரஸ்வதி(வயது30). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த தங்கவேல் மனைவி ஈஸ்வரி(40). குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று அவ்வழியாக நடந்து சென்ற ஈஸ்வரி தரப்பினரை சரஸ்வதி குடும்பத்தினர் வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். இதேபோல் அவர்களும் பிரச்சினையில் ஈடுபட கோஷ்டி மோதலாக மாறியது.

    இருதரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதுகுறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் ஈஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் பொன்னுச்சாமி, மாரியப்பன், சரசு, மூக்காயி, அம்மாபொண்ணு ஆகியோர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதேபோல் சரஸ்வதி கொடுத்த புகாரின்பேரில் சதீஸ், மகாமுனி, ஈஸ்வரி, பிரியா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×