search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலாண்மை ஆணையம் உத்தரவுப்படி காவிரி நீரை திறக்க வேண்டும்- ஜி.கே. வாசன் அறிக்கை
    X

    மேலாண்மை ஆணையம் உத்தரவுப்படி காவிரி நீரை திறக்க வேண்டும்- ஜி.கே. வாசன் அறிக்கை

    காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுப்படி காவிரி நீரை திறக்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக அரசு காவிரி நதிநீரில் தமிழகத்துக்கு ஜூன் மாதத்திற்குரிய 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

    காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆணையம் இரு மாநில மக்களின் நலன் கருதி நடுநிலையோடு, நியாயமான உத்தரவை பிறப்பித்துள்ளது.

    தமிழக அரசின் நியாயமான கோரிக்கைகளுக்கு மேலாண்மை ஆணையம் செவி சாய்த்திருப்பது தமிழகத்துக்கு கிடைத்த வெற்றியாகும். தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி கர்நாடக அரசு செயல்பட வேண்டும் என்பதில் காவிரி மேலாண்மை ஆணையம் உறுதியாக இருந்து தமிழகத்திற்கு உரிய காவிரி நதிநீர் காலத்தே கிடைக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×