என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவேரிப்பட்டணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்- தொழிலாளி உள்பட 2 பேர் பலி
Byமாலை மலர்28 May 2019 5:13 PM GMT (Updated: 28 May 2019 5:13 PM GMT)
காவேரிப்பட்டணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காவேரிபட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தாம்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாலிக்பாஷா. இவரது மகன் அஷாருதீன் (வயது 20). தொழிலாளியான இவர் நேற்று இரவு காவேரிப்பட்டணத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றின் பாலத்தில் போகும் போது எதிரே ஜெகதீஷ் என்பவர் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அஷாருதீன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அஷாருதீன், ஜெகதீஷ் ஆகிய 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அஷாருதீனை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு பரிதாபமாக அஷாருதீன் உயிரிழந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X