search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவொற்றியூரில் செல்போன் பறித்த 3 பேர் கைது
    X

    திருவொற்றியூரில் செல்போன் பறித்த 3 பேர் கைது

    திருவொற்றியூரில் செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவர் எர்ணாவூர் பகுதியில் பணியை முடித்துவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆட்டோவில் உடன் பயணித்த 3 பேர் அவரை ஏமாற்றி அவரிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.

    இதுகுறித்து ராஜீவ்காந்தி திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். எண்ணூர் விரைவு சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததால் செல்போன் கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது. இதனையடுத்து பாரிமுனையில் செல்போன்களை விற்பனை செய்வதற்காக நின்று கொண்டிருந்தவர்களை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஹரன், தனசேகரன் என்பதும் திருவொற்றியூரை சேர்ந்த சுரேந்திரன் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    3 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×