search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகூரில் லோடு ஆட்டோவில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
    X

    நாகூரில் லோடு ஆட்டோவில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

    நாகூரில் லோடு ஆட்டோவில் மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மதுபானங்களை தடுக்க வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில்  துணை சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மேற்பார்வையில் நாகூர் போலீசார் இன்று காலையில் வாஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் .

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பல லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மதுபாட்டில் கடத்தி வந்தது தெரியவந்தது.இதைதொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் நாகூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் திருச்சி உறையூர் ஜக்கம்மா நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அருண்குமார் (வயது 32) என்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் கடத்தி வந்த மதுபாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாட்டில் மதிப்பு ரூ. 1 லட்சத்துக்கு மேல் என கூறப்படுகிறது.

    Next Story
    ×