என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தவளக்குப்பம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை
பாகூர்:
தவளக்குப்பம் அருகே இடையார்பாளையம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் அய்யனார். இவர் அரியாங்குப்பத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் அன்புகுமார் (வயது27). இவர் புதுவையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கும் பி.எஸ். பாளையத்தை சேர்ந்த முகில்அரசிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் முகில்அரசி கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக்கொண்டு தாய்வீட்டுக்கு சென்று விட்டார்.
மனைவி பிரிந்து சென்ற முதல் அன்புகுமார் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் அய்யனாரும், அவரது மனைவியும் காய்கறி வியாபாரத்துக்கு சென்று விட்டனர். மதியம் வியாபாரம் முடிந்து வீட்டுக்கு வந்தபோது அங்கு மகன் அன்புகுமார் மின்விசிறியில் கயிறால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அன்புகுமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அன்புகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்