search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரியில் மாணவி கடத்தல்- வாலிபர் மீது புகார்
    X

    கிருஷ்ணகிரியில் மாணவி கடத்தல்- வாலிபர் மீது புகார்

    கிருஷ்ணகிரியில் மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சுண்டேகுப்பம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது பெண். இவர் காவேரிபட்டணம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11-ந்தேதி அன்று வீட்டில் தனது தந்தையிடம் மாணவி கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பெற்றோர் உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர்கிடைக்கவில்லை.

    இது குறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் தந்தை எனது மகளை கிருஷ்ணகிரி அருகேயுள்ள கட்லுக்குட்டப்பட்டியை சேர்ந்த சின்னசாமி மகன் இளவரசன் (வயது23) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×