search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசத்தில் கூலித்தொழிலாளி மர்ம மரணம்- மனைவி போலீசில் புகார்
    X

    பாபநாசத்தில் கூலித்தொழிலாளி மர்ம மரணம்- மனைவி போலீசில் புகார்

    பாபநாசத்தில் தாய் வீட்டிற்கு சென்ற கூலித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    பாபநாசம்:

    பாபநாசம் நகர சுத்தி தொழிலாளர் காலனியில் வசித்து வந்தவர் முருகானந்தம் (வயது35). கூலித்தொழிலாளி. இவர் மனைவி மேரி (27). கணவன்-மனைவி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்நிலையில் முருகானந்தம் அதே தெருவில் வசித்து வரும் தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

    இந்நிலையில் அவரது மனைவி மேரி கணவர் முருகானந்தம் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பாபநாசம் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம் பிரேதத்தை பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×