என் மலர்
செய்திகள்

பி.ஏ.பி. வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி
பி.ஏ.பி. வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சின்னவாளவாடி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பகவதி. இவரது மகன் நிர்மல் (23).இவர் பொள்ளாச்சி அருகே உள்ள செல்லக்காம்பட்டியில் பி.ஏ.பி. வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். அப்போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிர் இழந்தார்.
இது குறித்து கோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






