search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின் வெட்டு - பொது மக்கள் அவதி
    X

    சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின் வெட்டு - பொது மக்கள் அவதி

    சென்னை ஆர்.கே.நகர் பகுதி தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள ஐ.ஓ.சி. யில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் அவதிபட்டு வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை ஆர்.கே.நகர் பகுதி தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள ஐ.ஓ.சி. யில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் மின்சாரம் இன்றி அப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

    இந்நிலையில் இது தொடர்பாக பொது மக்கள் சிலர் தண்டையார்பேட்டை பவர் ஹவுஸ் சென்று இது தொடர்பாக புகார் அளிக்க அந்த பகுதிக்கு சென்றனர்.  அங்கு அதிகாரிகள் யாரும் இல்லாத நிலையில் இது தொடர்பாக விவரம் பெறப்படவில்லை.

    மேலும் இது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காத நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
    Next Story
    ×