search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருக்காட்டுப்பள்ளி அருகே வயலில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி
    X

    திருக்காட்டுப்பள்ளி அருகே வயலில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி

    திருக்காட்டுப்பள்ளி அருகே வயலுக்கு சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள மைக்கேல்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சேவியர் பிரிட்டோ (வயது 42) இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மாத்தூர் தங்கைய்யா நகரைச் சேர்ந்த ரோசி (41) என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆண், பெண் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மாத்தூரில் வசித்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சேவியர் பிரிட்டோ தன் தாய் வீடான மைக்கேல் பட்டிக்கு வந்துள்ளார்.

    இந்நிலையில் மைக்கேல்பட்டியில் வயலுக்கு சென்ற சேவியர் பிரிட்டோ மயங்கி விழுந்து இறந்து விட்டார்.

    தகவல் அறிந்து மாத்தூரில் இருந்து மைக்கேல்பட்டி வந்த ரோசி கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கென்னடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×