search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேட்டில் பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது
    X

    கோயம்பேட்டில் பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது

    கோயம்பேட்டில் பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    பாரிமுனையில் இருந்து வடபழனி நோக்கி நேற்று மாலை மாநகர பஸ் (எண்.15எப்) வந்தது. கோயம்பேடு பஸ் நிலையத்துக்குள் பஸ் வந்தபோது படிகட்டில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை கண்டக்டர் தனசிங் இறங்குமாறு கூறினார்.

    இதில் ஏற்பட்ட தகராறில் கண்டக்டர் தனசிங் பஸ்சில் இருந்து கீழே விழுந்தார். இதனை அறிந்த மாநகர பஸ் டிரைவர்கள்-கண்டக்டர்கள் பஸ்சை ஓட்டாமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்களை மீண்டும் இயக்க செய்தனர்.

    இதற்கிடையே கண்டக்டரை தாக்கியதாக சிந்தாதிரிப்பேட்டையில் தங்கி ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்த செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×