search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல்
    X

    முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல்

    போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய மர்மநபர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடைக்கானல் வரும்போது அவரை பார்த்துக்கொள்கிறோம் என்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். #Edapapdipalaniswami

    சென்னை:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் தனது பெயர் குருசங்கர் என்றும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் இருந்து பேசுவதாகவும் தெரிவித்தார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடைக்கானல் வரும்போது அவரை பார்த்துக்கொள்கிறோம் என்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். குருசங்கரை பிடிக்க வத்தலகுண்டு விரைந்துள்ளனர்.

    சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே நேற்று இரவு மர்ம சூட்கேஸ் ஒன்று கிடந்தது. அதில் வெடிகுண்டு பொருட்கள் ஏதேனும் இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து சென்ற போலீசார் சோதனை நடத்தினர். சோதனைக்கு பின்னர் சூட்கேசில் எதுவும் இல்லை என்பதும், அது காலியான சூட்கேஸ் என்றும் தெரிய வந்தது. இதன் பிறகே போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். #Edapapdipalaniswami

    Next Story
    ×