என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெத்தானூர் அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய 2 காட்டு யானைகள்
Byமாலை மலர்23 April 2019 12:44 PM GMT (Updated: 23 April 2019 12:44 PM GMT)
பெத்தானூர் அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பெரும்பாலை அடுத்துள்ள பெத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னு (வயது55). இவருக்கு சொந்தமாக விவசாயி நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளார்.
இன்று காலை சின்னு தனது விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தார். அப்போது பயிரிட்டுள்ள வாழைமரங்களை 2 காட்டு யானைகள் சேதப்படுத்தி கொண்டிருந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே யானையை விரட்ட சின்னு முயன்றார். ஆனால் யானை காட்டுக்குள் செல்ல மறுத்துவிட்டது.
இது குறித்து சின்னு வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சுமார் 1 அரை ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ள வாழைமரங்கள் காட்டுயானைகள் சேதப்படுத்தியதால் விவசாயி கவலை அடைந்தார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பெரும்பாலை அடுத்துள்ள பெத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னு (வயது55). இவருக்கு சொந்தமாக விவசாயி நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளார்.
இன்று காலை சின்னு தனது விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தார். அப்போது பயிரிட்டுள்ள வாழைமரங்களை 2 காட்டு யானைகள் சேதப்படுத்தி கொண்டிருந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே யானையை விரட்ட சின்னு முயன்றார். ஆனால் யானை காட்டுக்குள் செல்ல மறுத்துவிட்டது.
இது குறித்து சின்னு வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சுமார் 1 அரை ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ள வாழைமரங்கள் காட்டுயானைகள் சேதப்படுத்தியதால் விவசாயி கவலை அடைந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X