search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெத்தானூர் அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய 2 காட்டு யானைகள்
    X

    பெத்தானூர் அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய 2 காட்டு யானைகள்

    பெத்தானூர் அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பெரும்பாலை அடுத்துள்ள பெத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னு (வயது55). இவருக்கு சொந்தமாக விவசாயி நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளார்.

    இன்று காலை சின்னு தனது விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தார். அப்போது பயிரிட்டுள்ள வாழைமரங்களை 2 காட்டு யானைகள் சேதப்படுத்தி கொண்டிருந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே யானையை விரட்ட சின்னு முயன்றார். ஆனால் யானை காட்டுக்குள் செல்ல மறுத்துவிட்டது.

    இது குறித்து சின்னு வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் சுமார் 1 அரை ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ள வாழைமரங்கள் காட்டுயானைகள் சேதப்படுத்தியதால் விவசாயி கவலை அடைந்தார்.
    Next Story
    ×