என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தண்டராம்பட்டு அருகே தந்தையை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்
Byமாலை மலர்23 April 2019 11:31 AM GMT (Updated: 23 April 2019 11:31 AM GMT)
தண்டராம்பட்டு அருகே குழந்தையை கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் தந்தையை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தண்டராம்பட்டு:
குழந்தையை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த வாலிபர் தந்தையை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). இவரது மனைவி ராஜேஸ்வரி தம்பதிக்கு 3 மாத ஆண் குழந்தை இருந்தது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி இரவு வீட்டில் கார்த்திகேயன் அவரது தந்தை தனபால், ராஜேஸ்வரி மற்றும் குழந்தை என அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அரிவாள் வெட்டும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு ராஜேஸ்வரி எழுந்து பார்த்த போது கார்த்திகேயன் அரிவாளால் தனது குழந்தையை துண்டு, துண்டாக வெட்டிகொண்டிருந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி கத்தி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். குழுந்தை இறந்து கிடந்ததை பார்த்து திகைத்தனர்.
இது குறித்து வானாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு திருவண்ணாமலை கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில் கார்த்திகேயன் கடந்த 1-ந் தேதி ஜாமீனில் வந்தார். அவரிடம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாரும் பேசவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திகேயன் தான் ஜெயிலுக்கு போனதற்கு தந்தை தனபால் தான் காரணம் என ஆத்திரத்தில் இருந்தார். எனவே அவரை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.
நேற்று இரவு தனபால் வீட்டின் திண்ணையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திகேயன் கோடாரியால் தனது தந்தை தனபாலின் தலையை துண்டாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. ஹேமசித்ரா தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார்த்தியேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற குழந்தை மற்றும் தனது தந்தையை அடுத்தடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியது.
குழந்தையை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த வாலிபர் தந்தையை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). இவரது மனைவி ராஜேஸ்வரி தம்பதிக்கு 3 மாத ஆண் குழந்தை இருந்தது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி இரவு வீட்டில் கார்த்திகேயன் அவரது தந்தை தனபால், ராஜேஸ்வரி மற்றும் குழந்தை என அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அரிவாள் வெட்டும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு ராஜேஸ்வரி எழுந்து பார்த்த போது கார்த்திகேயன் அரிவாளால் தனது குழந்தையை துண்டு, துண்டாக வெட்டிகொண்டிருந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி கத்தி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். குழுந்தை இறந்து கிடந்ததை பார்த்து திகைத்தனர்.
இது குறித்து வானாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு திருவண்ணாமலை கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில் கார்த்திகேயன் கடந்த 1-ந் தேதி ஜாமீனில் வந்தார். அவரிடம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாரும் பேசவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திகேயன் தான் ஜெயிலுக்கு போனதற்கு தந்தை தனபால் தான் காரணம் என ஆத்திரத்தில் இருந்தார். எனவே அவரை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.
நேற்று இரவு தனபால் வீட்டின் திண்ணையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திகேயன் கோடாரியால் தனது தந்தை தனபாலின் தலையை துண்டாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. ஹேமசித்ரா தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார்த்தியேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற குழந்தை மற்றும் தனது தந்தையை அடுத்தடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X