என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோத்தகிரி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுவன் பலி
Byமாலை மலர்10 April 2019 10:01 AM GMT (Updated: 10 April 2019 10:01 AM GMT)
கோத்தகிரி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து சோலூர்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி:
கோத்தகிரி அருகே உள்ள போத்திமுக்கு கம்பியூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். கூலித்தொழிலாளி. இவரது மகன் சக்திவேல்(வயது 6). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த மாணவன் சக்திவேல் பின்னர் விளையாட சென்றான். ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவனது பெற்றோர் அவனை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான 10 அடி ஆழமுள்ள கிணற்றில் சிறுவன் கிடந்துள்ளான். விளையாடி கொண்டிருந்த போது சிறுவன் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டான். இதனையடுத்து அவனது பெற்றோர் மற்றும் அந்த பகுதி மக்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சோலூர்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி அருகே உள்ள போத்திமுக்கு கம்பியூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். கூலித்தொழிலாளி. இவரது மகன் சக்திவேல்(வயது 6). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த மாணவன் சக்திவேல் பின்னர் விளையாட சென்றான். ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவனது பெற்றோர் அவனை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான 10 அடி ஆழமுள்ள கிணற்றில் சிறுவன் கிடந்துள்ளான். விளையாடி கொண்டிருந்த போது சிறுவன் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டான். இதனையடுத்து அவனது பெற்றோர் மற்றும் அந்த பகுதி மக்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சோலூர்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X