search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலங்குளத்தில் மதுகுடிக்க வலியுறுத்தி மனைவியை தாக்கிய தொழிலாளி
    X

    ஆலங்குளத்தில் மதுகுடிக்க வலியுறுத்தி மனைவியை தாக்கிய தொழிலாளி

    ஆலங்குளத்தில் மனைவியை மது குடிக்க வலியுறுத்தி தகராறில் ஈடுபட்ட தொழிலாளி குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை அக்னிமாடன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 36). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சீதா (30). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முருசேனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. 

    இந்நிலையில் நேற்று இரவு முருகேசன் வீட்டில் இருந்து மதுக்குடித்துள்ளார். அப்போது சீதாவையும் மதுக்குடிக்குமாறு கூறியுள்ளார். இதற்கு சீதா மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த முருகேசன் சீதாவை அடித்து தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த அவர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது குறித்து ஆலங்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×