search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கணவரை இழந்த பெண்ணிடம் திருமணம் செய்ய வற்புறுத்திய வாலிபர் கைது
    X

    கணவரை இழந்த பெண்ணிடம் திருமணம் செய்ய வற்புறுத்திய வாலிபர் கைது

    திருச்சியில் கணவரை இழந்த பெண்ணிடம் திருமணம் செய்ய வற்புறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சி கருமண்டபம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (36). இவரது உறவினர் ஒருவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரின் மனைவி தனியாக இருந்து வந்தார். இதனால் கந்தசாமி தனியாக இருந்த இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வந்துள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார்.

    இந்நிலையில் பெண்ணின் வீட்டிற்கு சென்ற கந்தசாமி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறி தகராறு செய்துள்ளார். அதே நேரத்தில் அங்கு வந்த அவரின் உறவுப் பெண்கள் தேவி, பத்மாவதி ஆகியோர் கந்தசாமியை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் அவர்கள் இளம்பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. 

    இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கந்தசாமியை கைது செய்தனர். மேலும் தேவி, பத்மாவதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
    Next Story
    ×